வீட்டுத்தோட்டம் - சிறு நினைவு குறிப்பு

Posted: Wednesday, February 17, 2010 | Posted by no-nononsense | Labels:
Excerpts from the discussion on BT.Brinjal and Home gardeining:

பி.டி. கத்தரிக்காயில் மட்டுமா ஆபத்து? தற்கால பூச்சிக்கொல்லி விவசாய முறையே விஷத்தைத்தானே விளைவித்துக் கொண்டு இருக்கிறது. முட்டைகோஸையும், காலிபிளவரையும் அதன் விளை நிலத்தில் சென்று பார்த்தவர்கள் ஏழேழு ஜென்மத்திற்கும் உணவில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அந்தளவுக்கு, காய் ஃபிரெஸ்ஸாக இருக்கவேண்டும் என்று ரசாயனத்தில் முக்கி எடுப்பார்கள். கத்தரிக்காயும் அப்படித்தான்.

*

திருச்சியில் நான் பணிபுரிந்தபோது என்னுடைய வாடிக்கையாளர் ஒருவரது வீட்டிற்கு அவரது அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். அங்கே அவரது வீட்டு பின்கட்டில் அவர்கள் பராமரித்து வந்த வீட்டு தோட்டம் கண்ணில் பட்டது. அருகில் சென்று பார்த்தவன் அசந்தே விட்டேன். ஒரு வீட்டு சமையலுக்கு தேவையான காய்கறி இனங்களில் பெரும்பாலானவை அங்கே சிறிய அளவில் பயிராகிக்கொண்டு இருந்தன.

அவரை, வெண்டை, கத்தரி, தக்காளி, சுரை போன்ற காய்கறிகளுடன் புதினா, தண்டு கீரை போன்ற கீரை வகைகளும் அவற்றில் அடக்கம். வெங்காயமும், கறிவேப்பிலையும் கூட இருந்ததாக ஞாபகம். முழுமையாக கவனித்து உள்வாங்கிக்கொள்ள அன்று நேரம் அனுமதிக்கவில்லை.

இதெல்லாம் தன்னுடைய ஓய்வுபெற்ற தந்தையின் வேலை என்றும், தாங்கள் அரிதாகவே கடைகளில் காய்கள் வாங்குவதாகவும் சொன்னார். அழகாக இடம் விட்டு, பாத்தி கட்டி பராமரிப்பில் இருந்த அவற்றைப் பார்க்கவே ஆசையாக இருந்தது.

ஆனால் இதற்கெல்லாம் வீட்டில் கொஞ்சமேனும் காலியிடமும், களப்பணியில் சிறிதேனும் ஆர்வமும், வளையும் முதுகும் வேண்டும்.

0 comments:

Post a Comment