முத்திரை சுமக்கும் முதுகுகள்

Posted: Sunday, February 21, 2010 | Posted by no-nononsense | Labels:
ஒரு விழிப்புணர்விற்காக எதை பேசினாலும் அது சம்பந்தமான இயக்க முத்திரையை நம்மீது குத்தி விடுகிறார்கள்

முத்திரைக்கெல்லாம் பயந்தால் உன் வாழ்க்கையை உன்னால் வாழ்ந்திடவே முடியாது. அடுத்தவர் வாழ்க்கையை நீ வாழும் அவலம்தான் நேரிடும் . “வாழ்ந்தாலும் ஏசும்; தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா’ எனும் பழைய அற்புதமான பாடலை இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

ஆனால் அதெல்லாம் உன்னளவில் நீ உன்னை தெளிவாக வைத்துக்கொள்வதில் மட்டுமே இருக்கவேண்டும். அதாவது சுயத்தை சுத்திகரிப்பு செய்துகொள்வதில் மட்டும். மற்றபடி, குடும்ப வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கும்வரை, லௌகீகத்தில் ஈடுபாடுகொண்டிருக்கும்வரை அரசுக்கெதிராகவோ, ஆளும் கட்சிக்கெதிராகவோ இயக்கம், போராட்டம் என்ற பெயரில் நீ தயவு செய்து எதையும் என்றும் முயன்றிட வேண்டாம்.

உணர்ச்சி மேலிட வைக்கும், உணர்வை தூண்டும் சம்பவங்கள் எல்லா காலங்களிலும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. நடந்து கொண்டேதான் இருக்கும். இல்வாழ்க்கையில் இருந்துகொண்டு நம்மால் முடியக்கூடியது நல்லனவற்றுக்கு நம்முடைய தார்மீக ஆதரவை நல்குவது மட்டுமே.

- கருத்து சுதந்திரம் குறித்த உரையாடலின் ஒரு பகுதி

0 comments:

Post a Comment