தற்கால ஈழச்சூழலில் எம்ஜிஆரையும் வைகோவையும் முன்வைக்கும் அரசியல்

Posted: Monday, March 1, 2010 | Posted by no-nononsense | Labels: ,
தற்கால ஈழச்சூழலில் எம்ஜிஆர், வைகோவை முன்வைத்த விவாதத்திலிருந்து:

எம்ஜிஆர் சாகும்போது அவருக்கு 70 வயது. இன்னும் உயிருடன் இருந்திருந்தால் தற்போது 93 வயது ஆகியிருக்கும். அவருக்கு இருந்த உடல் உபாதைகளில் இதெல்லாம் நடக்கிற காரியமா? இந்த ஈழப் பிரச்சினையைப்பற்றி பேசும் புலி ஆதரவாளர்கள் எல்லாம் ஏன் இன்னும் ”எம்ஜிஆர் மட்டும் இருந்திருந்தால்..” என்று இறந்து புதைத்து விட்ட செய்தி ஒன்றுக்கு பூ வைத்து பொட்டு வைத்து உதார் விடுகிறார்கள் என்பதுதான் எனக்கு புரியாத புதிர்.

எம்ஜிஆர் புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார்; கோடி ரூபாய் பணம் கொடுத்தார் என்பதெல்லாம் அதை அவர் கொடுத்த காலத்தில் சுலபமான காரியம். அப்போது ராஜிவ்காந்தியோ பத்பநாபாவோ இந்தியாவில் புலிகளால் கொல்லப்பட்டிருக்கவில்லை. மேலும், ஈழப் பிரச்சினையை அங்கே அரசியல் ரீதியாகவும் முன்னெடுக்க அமிர்தலிங்கம் போன்ற மக்கள் ஆதரவை பெற்ற மிதவாத தலைவர்களெல்லாம் இருந்தனர். அதனால் ஆயுதம் அரசியல் என இருபுறமும் போராட்ட களன் சமநிலை பெற்றிருந்தது.

ஆனால் ராஜிவ் கொலைக்கு பிறகு இந்திய தேசிய அரசியலில் மட்டும் அல்ல, தமிழ்நாட்டிலும்கூட புலிகளைப்பற்றிய பார்வை முற்றிலும் மாறி விட்டது. எம்ஜிஆரே அப்போது ஆட்சியில் இருந்திருந்தாலும்கூட அந்த நிகழ்வுக்காக அவர் கோபித்துக் கொண்டிருப்பார் என்று நம்ப இடமிருக்கிறது. அந்தளவு எம்ஜிஆரும் ராஜிவ்காந்தியும் கூட்டணி அரசியலில் வெகு இணக்கமாக இருந்தனர்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த சூழ்நிலைகளையும் அப்போதையை சில நிகழ்வுகளையும் மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு, இன்னும் அதையே அசைபோட்டுக்கொண்டு பின்தங்கி கிடக்காதீர்கள் புலி ஆதரவாளர்களே. பிராந்திய அரசியல் அதற்கு பிறகு எவ்வளவோ மாற்றம் கண்டு விட்டது என்பதை உணருங்கள்.

அப்புறம், வைகோ..?!

கடந்த பத்தாண்டுகளில் இவருடைய கட்சிக்கு தமிழ்நாடு குறைந்தது பத்து எம்.பிக்களையாவது கொடுத்திருக்கிறது. அவர்களைக் கொண்டு கூட்டணி கட்சிகளுக்கு வால் பிடித்ததைத் தவிர இவர் வேறு என்ன சாதித்தார் என்பதை முதலில் பரிசீலித்து விட்டு பிறகு அதன்மேல் கட்டுங்கள் கனவையும் அதில் கோட்டையையும்.

If 'ifs' and 'buts' were candy and nuts, we'd all have a Merry Christmas.. என்பதெல்லாம் கழிவிரக்கத்தை காட்டுகிறதேயன்றி, அடுத்து ஆகவேண்டிய காரியத்தை அலசுவதாக இல்லை.

2 comments:

  1. no-nononsense said...
  2. Test. சோதனை மறுமொழி.

  3. no-nononsense said...
  4. Test comment. டெஸ்ட்.

Post a Comment