சக்ஸஸ்ஃபுல் சாமியாராவது எப்படி?

Posted: Thursday, March 11, 2010 | Posted by no-nononsense | Labels: , ,
சாமியார்கள் பற்றி தொடரும் உரையாடல்:

அடியேனும் அதை எதிர்பார்க்கிறேன்.அதற்க்கான வாய்ப்புண்டா என்று உனக்கு தெரிந்த ஒரு சுவாமிகளிடம் கேட்டு ஒரு சீட் வாங்கி தா

முன்னெச்சரிக்கை: பக்தர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம்.

எனக்கு ஆசாமிகளைத் தவிர ஒரு சாமியுடனும் சங்காத்தம் இல்லை. தவிரவும், சாதாரணமாக எல்லாம் சக்ஸஸ்ஃபுல் சாமியார் ஆகிவிடமுடியாது.

-ஊன் உறக்கம் தவிர்த்து பல மணி நேரங்கள் நிஷ்டையில் ஆழ்ந்துவிடும் திறமை வேண்டும். அல்லது அப்படி நடிக்கவாவது தெரிய வேண்டும். உறக்கம் தவிர்ப்பாய்; ஊன் உனக்கு கஷ்டம்.

-சமஸ்கிருதம் கற்றுவைத்துக்கொண்டு அதிலிருந்து அவ்வப்போது சுலோகங்களை அள்ளிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் மாமா மாமிக்கள் நம்புவா. அவர்கள் கூட்டம் கூடினால்தான் உனக்கு பரிசுத்தர் பட்டம் கிடைக்கும். சினிமா செய்தி இல்லையெனில், அரைப்பக்கத்துக்கும் மேல் எந்த புத்தகத்தையும் திருப்பி பழக்கமில்லாத உனக்கிது ஆகாதவேலை.

-குருடர்கள் பார்க்கிறார்கள்; முடவர்கள் நடக்கிறார்கள்; சர்வ ரோகமும் சடுதியில் சொஸ்தமாகிறது என்றெல்லாம் விளம்பரம் செய்யும் மார்க்கெட்டிங் உத்தியில் வல்லவனாக இருக்கவேண்டும். அரைமணி நேரம்கூட வெளியே அலைந்து திரிய அலுத்துக்கொள்கிறாய். உனக்கு இதுவும் கஷ்டம்.

-எதைப்பற்றிக் கேட்டாலும் ஆத்மா, ஜீவன், முக்தி, கிரகம், கர்மா, வினைப்பயன், தியானம், பாவம், ஸவரஞான, பரிபூரண .. etc etc, என்று எளிதில் புரியாத வார்த்தைகளை ஆங்காங்கே தூவி விட்டு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு பதில் பேசத் தெரிய வேண்டும். அதுவும் கேட்பவன் தமிழன் என்றால் கண்டிப்பாக அவனிடம் 50% ஆங்கிலம் கலந்த தங்லீஸுல்தான் உரையாட வேண்டும். தூய தமிழில் பேசினால் ஒரே ஒரு வெள்ளை காலர் சிஷ்ய(யை)கோடி கூட கிடைக்க மாட்டான். அப்புறம் ஒரு பீடிக்குகூட வழி பிறக்காது. ஆண்களிடம் அலுக்காமல் பேசுவதென்பது உனக்கு ஒத்து வருமா, சொல்?? ம்ஹூம்!

-ஓஷோ, ஜேகே, ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானதர், தயானந்த சரஸ்வதி, அரவிந்தர், ஆரிய பிரம்ம குமாரிகள் சமாஜ தியாஸபிகல் முன்னோடிகளின் பிரசங்கங்களையெல்லாம் மிக்ஸியில் போட்டடித்து உனக்கென ஒரு மார்க்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ”இவங்க சினிமாவெல்லாம் நான் பார்த்ததேயில்லையே” என்பாய் நீ. உன்னை நானெப்படி சாமியார் ஆக்கி அழகிகள் சூழ அழகு பார்க்க?

-மேலும், முதலில் உன் மார்க்கத்துக்கென ஸ்வஸ்திக்கோ லிங்கமோ அல்லது இரண்டையும் கலந்த மாதிரியோ ஒரு குறிச்சின்னம் வடிவமைக்க வேண்டும். அது குறிப்பதாகச் சொல்ல என ஈஸ்வரனின் ரூபங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கவேண்டும்.(எல்லா பெரிய சாமியார்களும் ஈஸ்வரனை வழிபடுபவர்களாக இருப்பதன் பின்னால் உளவியல் காரணம் ஒன்று புலப்படுகிறது). இருக்கும் எல்லா சாமியார்களும் ஏற்கெனவே எல்லாவற்றையும் பிராண்ட் செய்து லேபிள் ஒட்டிவிட்டார்கள்தான் என்றாலும், நம் ஊரில் கடவுள்களின் ரூபங்களுக்கா பஞ்சம்? அதிலொன்றை இந்துத்துவ நிபுணர்களை கலந்தாலோசித்து கப்பென்று பிடித்துக்கொள். அதிலும் ஒரு கண்டிஷன், அது மாரியம்மன், காளியம்மன் என்று B-C செண்டர் சாமிகளாக இருக்கக்கூடாது. அவற்றின் பக்கமெல்லாம் மழைக்கும் ஒதுங்கக்கூடாது.

-இதெல்லாம் முடிவான பிறகு உங்கள் கம்பெனிக்கென, மன்னிக்கவும், கம்யூனுக்கென ஒரு யூனிஃபார்மும் டிஸைன் செய்ய வேண்டும்(சிவப்பை பங்காரு பேடண்ட் வாங்கிவிட்டார்). அது வெள்ளையாக இருப்பது ஷேமம். அப்போதுதான் ஹைடெக் களை கிட்டும்.

-இதுபோக, வாரா வாரம் ஏதாவது பத்திரிக்கையில் தொடர் எழுதுதல், பக்தர்களிடம் சின்ன சின்ன சித்து வேலைகள் செய்தல், அரசியல்வாதிகளுக்கு ஜோஸியம் பார்த்தல் மற்றும் ஒரே நாளில் ஒரு கோடி மரம் நடுதல், ஒரு லட்சம் பேருடன் உட்கார்ந்து மழைவேண்டி மஹாயாகங்கள் செய்தல் போன்ற ஹைஜீனிக்-ஹைடெக்-எண்வைரன்மெண்டல் சமூகப்பணிகளில் ஈடுபடுதல் என்று இன்னும் எவ்வளவோ இருக்கிறது. (சமூகப்பணி என்று சொல்லிக்கொண்டு சேரிப்பக்கமெல்லாம் போனால் அப்புறம் உன்னை ஒரு வெள்ளைக்காலர் பக்த(தை)னும் மதிக்க மாட்டான்; பணம் கொட்டவே கொட்டாது. கவனம்!)

அதனால், கார்ப்போரேட் சாமியார் ஆவதொன்றும் அவ்வளவு சுலபமில்லை. வேண்டுமானால் பஸ்கி சாமியார், விஸ்கி சாமியார், சுருட்டு சாமியார் மாதிரி நீ ’பீர் சாமியார்’ லெவலுக்கு ஏதாவது முயற்சி செய்து பாரேன்! வேலையும் பெயரும் கனப்பொருத்தமாக இருக்கும் :-))

ஓஸானா சூன்யஸ்ரீ சுரேஷானந்த பரம்ஹம்ஸம்!! :)

1 comments:

  1. no-nononsense said...
  2. test

Post a Comment