பெண்ணியம் பேசுதல்

Posted: Saturday, March 13, 2010 | Posted by no-nononsense | Labels:
கல்வியறிவு பெருக பெருக காலமும் மாறிக்கொண்டிருக்கிறது. இதில் எழுதப்பட்டுள்ளவையெல்லாம் ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். இன்று நிலைமை அப்படியல்ல.

என்னதான் பெண்ணியம் பேசினாலும் இயற்கையாகவே பெண்கள் இரண்டாம் நிலையில்தான் பல விஷயங்களிலும் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவானது. அதனால் ஒருநாளும் சரிநிகர் சமானமாவது முடியாது. இவர்கள் எழுதுவதையெல்லாம் பார்த்தால், நான் மட்டும் ஏன் வேட்டைக்குப் போக வேண்டும் என்று பெண் சிங்கம் ஆண் சிங்கத்திடம் சண்டைக்கு போகவேண்டியிருக்கும் :-) இயற்கையின் படைப்பு அவ்விதம்; அவ்வளவுதான்.

பெண்களின் மீது காட்டப்படும் அடக்குமுறைகளை, மறுக்கப்படும் உரிமைகளைப்பற்றி குரல் கொடுப்பதில் பிரச்னையில்லை. ஆனால் நாம் ஏற்றுக்கொண்டிருக்கும் சமூக வாழ்க்கையில், ஓட்டுநர் இருக்கையில் ஆண்கள் அமர்வது தவிர்க்கமுடியாதது. அதைப்பற்றியே மீண்டும் மீண்டும் கவிதைகளும், வசனங்களையும் வாரிவிட்டுக்கொண்டிருப்பதெல்லாம் வெட்டி வேலை.

குடும்பத்தில் பெண்களின் உரிமைகளை, சுதந்திரத்தை அக்குடும்பத்தின் சூழ்நிலைகளும், அம்மனிதர்களுக்கிடையேயான புரிதல்களுமே நிர்ணயிக்கின்றன. பொதுவான ஒரு சட்டம் போட்டு இதையெல்லாம் பொதுமைப்படுத்திவிட முடியாது.

-பெண்களின் நிலைப்பற்றிய உரையாடலிலிருந்து..

0 comments:

Post a Comment