போலிகளின் மருத்துவம் - தொடரும் உரையாடல்

Posted: Thursday, March 18, 2010 | Posted by no-nononsense | Labels:
//படித்தவர்களாலேயே அறிந்து கொள்ள முடியாது எனும்போது //
புரிந்துகொள்ள முடியாது என சொல்வதற்கில்லை... ஒரு அசால்ட் லுக்.. வரும் முன் காப்போம் என்பதை மறந்து வந்த பின் அனுபவிக்க வேண்டியது தான்

படித்தவர்களாலேயே அறிந்துகொள்ள முடியாது என்று நான் சொன்னது எதனையென்றால்:

உணவு பொருட்களில் போலிகளை எளிதில் இனம் காணுவது போல, மருத்துகளை கையில் எடுத்துப் பார்த்தோ நுகர்ந்து பார்த்தோ அல்லது சிறிய சோதனைகளின் மூலமோ அது உண்மையா போலியா என்று எளிதில் அறிந்துகொள்ள முடியாது என்பதை.

மருந்துப் பொருள் போலிகளில் பல வகை உண்டு.

1. சரியான அளவில் உட்பொருட்கள் இல்லாதவை
2. தவறான உட்பொருட்கள் கொண்டவை
3. ஆபத்து விளைவிக்கும் உட்பொருட்கள் கொண்டவை

இப்படி இன்னும் பல இருக்கலாம். (எப்போதோ படித்ததை வைத்து வகைப்படுத்தியிருக்கிறேன். துறை வல்லுநர்களுக்கே உள் நிலவரம் தெரியும்)

இதையெல்லாம் அத்துறையில் பயிற்சி உள்ளவர்களாலுமே கூட உடனே கண்டுபிடித்துவிட முடியாது. மருந்தை பரிசோதனைகூடம் அனுப்பி, அதன் முடிவுகளைப் பார்த்தால்தான் அவர்களாலும் சொல்லமுடியும். இப்படிப்பட்ட நிலையில் படித்தவர்களே மருந்து வாங்க சென்றாலும் கூட, எவ்வளவுதான் உஷாராக உற்று உற்று படித்துப் பார்த்தாலும் மருந்தின் உண்மைத் தன்மையை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? நம்மால் முடிந்ததெல்லாம் expiry date -ஐ நன்கு கவனித்து வாங்குவது மட்டுமே.

இதில் முதலில் தார்மீக அக்கறையை வெளிப்படுத்த வேண்டிய கடமை டாக்டர்களுக்கே உள்ளது. அவர்களுக்கு ஓரளவுக்கு எந்த கம்பெனியின் மருந்துகள் போலி அல்லது தரமற்றவை என்பது தெரிய வாய்ப்புள்ளது. இருந்தாலும், பெரும்பாலும் எந்த கம்பெனி தங்களை நன்கு ‘கவனிக்கிறதோ’, அவர்களின் மருந்துகளே பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த கவனித்தலில் ஆளுக்கு தகுந்தபடி பணம், பவுன் முதல் ’பட்டாயா’ வரை அத்தனையும் அடக்கம்.

இன்னொன்று கேள்விப்பட்டேன். பிரசவ ஆஸ்பத்திரிகளில் தான் தற்சமயம் அதிக அளவில் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் தேவைப்படுகின்றன. அவற்றில் தரமற்றவைகள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்றார் லேப் நண்பர் ஒருவர். காரணம் அதில் உபரியாக தனியாக ஒரு மார்ஜின் நிற்கிறதாம் :(

உடலில் நோயும் உபாதையும் வந்து விட்டால் நாம் செய்வதெல்லாம் மருத்துவர்களையும் அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும் தெய்வமாக நம்புவது மட்டும்தான்! நமக்கு நம்பிக்கை! அவர்களுக்கு கேஸ் கணக்கு; பெட் கணக்கு!


Its not at all possible in Inida as per current situation..even in future too.. lot of basic changes are supposed to come..

இந்தியாவில் முதலில் பெரிய ரூபாய் நோட்டுக்கள்(500, 1000) ஒழிய வேண்டும் என்று நம் நண்பர்களில் ஒருவன் ஒருநாள் சொன்னான். அப்போதுதான் அதிகப் பணங்களை சூட்கேஸில் கைமாற்றுவது, கரன்ஸி மாலை போட்டு பகட்டு காட்டுவது எல்லாம் ஒழியும்; எல்லா பரிவர்த்தனைகளும் வங்கி கணக்குகள் மூலம் நடைபெறும் என்பது அவ்வுரையாடலின் சாராம்சம். அதுபோன்ற அடிப்படை மாற்றங்களில் ஒன்றுதான் மெடிக்கல் இன்சூரன்ஸின் அவசியமும்.

இதெல்லாம் நடைமுறைக்கு வர வேண்டும் என்பது விருப்பம். வந்தால் நல்லது. வர விடமாட்டார்கள் என்பது தலையெழுத்து!

0 comments:

Post a Comment