சிற்சில குறிப்புகள் (1)

Posted: Friday, August 6, 2010 | Posted by no-nononsense | Labels:
  • எத்தைத் தின்றால் பித்தம் தெளியுமென்றறிய செத்த நேரம் வெளியே உலாவி வரலாமென்றால், நித்தம் பொட்டியில் கண் பதியாவிட்டால் இன்று பெருங்குத்தமாகி வாடிக்கையாளரின் சோளியே சுத்தமாகி விடும் போலுள்ளதே. 
  • தடவியல் நிபுணர் சந்திரசேகரனின் ‘கிரிமினல்கள் ஜாக்கிரதை’ என் வாசிப்பில் இருக்கிறது. எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்ட வழக்கு பற்றிய குறிப்பில், ராதா அருகிலிருந்து சுட்டும், தன்னை தானே சுட்டுக் கொண்டும் இருவருமே ஏன் இறக்கவில்லை என்பது குறித்த ஆய்வு விளக்கம் சுவாரசியம்.
  • உண்டி சிறுக்க உகந்த வழியென 
    நாக்கை இறுக்கச் சொன்னார் - முயன்று 
    முடிவில் மூக்கறுந்து போவதே மிச்சம்.


0 comments:

Post a Comment