சிற்சில குறிப்புகள் (3)

Posted: Friday, August 13, 2010 | Posted by no-nononsense | Labels:
பாரதிதாசன் கவிதை:

எங்கெங்கு காணினும் சக்தியடா...தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா


கலைஞரின் உல்டா எந்திரன் வாழ்த்து கவிதை:

எங்கெங்கு காணினும் வெற்றியடா
ஏழு கடல் தாண்டியும் எந்திரன் முழங்குமடா

-----------

தற்சமயம் வீட்டில் குமுதம், ஆனந்த விகடன் இரண்டும் வாங்கி வருகிறேன். இரண்டுமே குடும்பத்தார் படிப்பதற்காக. இரண்டில் ஒன்றை நிறுத்தி விட்டு இனி கல்கி வாங்க இருக்கிறேன். ’ஞாநி’யின் ஓ பக்கங்களை படிப்பதற்காக. குமுதத்தில் கருத்துரிமை மறுக்கப்பட்ட ஞாநி இந்த வாரம் முதல் கல்கியில் எழுத இருக்கிறார். 

குமுதம் என்றதும் சாருவின் பின்வரும் கமெண்ட் தான் ஞாபகம் வருகிறது:

முரசொலி வீக்லியாக வர ஆரம்பித்து விட்டது. சினிமா செய்திகள்; கலர் படங்கள். ரகளை. பெயர்தான் குமுதம் என்று இருக்கிறது. முரசொலியே பெட்டர் இல்ல?

-----------

#இலங்கை மீனவர்களை கொல்வது யார்? செயற்கை கோள்கள் உதவியுடன் கண்டுபிடிக்க வேண்டும்!-கனிமொழி எம்.பி.-

இது என்னங்க கொடுமை? இந்தளவா மக்களை முட்டாளா நினைப்பாங்க...இவங்க? தந்தை வழியில் வீறு நடை போட்டு கிளம்பி விட்ட கவிதாயினியே நீங்கள் வாழ்க!

இலங்கை மீனவர்களை கொல்வது யார் என கண்டுபிடிக்க செயற்கை கோள் உதவியை நாடும் தங்கள் புத்தி கூர்மையை காணும் போது செம்மொழி மாநாட்டில் தங்கள் இலக்கிய திறனை ஆராய்ந்து இரண்டு ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டது சரியே.

http://sathish777.blogspot.com/2010/08/blog-post_12.html

-----------
இந்தியாவுக்கு சுதந்திரம் ‘நள்ளிரவில்’ கிடைத்த கதை:

இந்திய சுதந்திர போராட்டத்தின் கிளைமாக்ஸ் காலமாகிய 1947 ஆகஸ்ட் மாத நிகழ்வுகளை படித்து கொண்டிருந்தேன்: இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் என்று அறிவித்து விட்டார்கள். விட்டார்களா நம் சாஸ்திர சாம்ராட்டுகள்.. “அந்த தேதியில் கிரஹ ஸ்தானம் சரியில்லை, நாங்கள் கணிக்கும் தேதியில்தான் சுதந்திர அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்று அறிக்கைகள் விட்டார்கள். ஒரு குழுவாக சென்று மௌண்ட்பேட்டனை சந்தித்தார்கள். உலகம் முழுவதும் அறிவித்த பிறகு இனி மாற்றமுடியாது என்று ஒருவழியாக உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என்று ஆகஸ்ட் 14-15 நள்ளிரவில் முறையாக அறிவித்து கொடியேற்றினார்கள். இதுதான் நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்த கதை.

0 comments:

Post a Comment