கமல் ஒரு காப்பி கேட் என்னும் விமர்சனம் குறித்து

Posted: Friday, August 13, 2010 | Posted by no-nononsense | Labels:
நண்பர்களிடம் உரையாடியது என்பதால் நடை கொஞ்சம் நெகிழ்வாகத்தான் இருக்கும்:

http://www.youtube.com/watch?v=UPpao48pMG0&feature=related
http://www.youtube.com/watch?v=xC76hSbzpRo&feature=related


1) ஏண்டா, உங்களுக்கு ‘என்னது இந்திராகாந்தி இறந்து விட்டாரா’ங்கற மாதிரி ஒரு ....மேட்டர்தான் கெடைச்சுதா. அன்பே சிவம் மாதிரி முழுப் பட உல்டாவே இருக்கும்போது தம்மாதூண்டு மேட்டர வெச்சிகினு சதாய்ச்சிகினு இருக்கீங்க... எம் தலைவருக்கென்று ஒரு பாலிஸி உண்டு. தனியே அவருக்கென்று ஒரு குணம் உண்டு. அது:


சென்றிடுவீர் எட்டுத் திக்கும்
கலைச் செல்வம் யாவும்
கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

இதைச் சொன்னவன் பாரதி. பாரதியின் சொல்லை வாழ்வில் கடைபிடித்து வாழ்பவரே எம் தலைவர் கமல். ஆமாம். காப்பிதான்.  உலக சினிமா கலைச்செல்வங்கள் யாவும் கொண்டுவந்து தமிழர்களுக்கு கொடுப்பதை ஒரு தவமாக செய்து வருபவரை பார்த்து இப்படி வசைமாரி பொழிகிறீர்களே..? இருந்தாலும், அண்ணா சொன்னது போல் உங்களை ‘வாழ்க வசவாளர்கள்’ என்று வாழ்த்தவே முற்படுகிறோம். காரணம் எங்களை பொறுத்தவரை பகைவனுக்கும் அருள்வோம். ‘அன்பே சிவம்’!

தமிழ்ல உருப்படியா ஒன்னு ரெண்டு படம் எடுக்கறவங்களையும் விட மாட்டீங்களே.

கமலிடம் எனக்கு ஒப்புதல் இல்லாத விஷயம்: காப்பியடிப்பார்.. வேறு வார்த்தைகளில் சொன்னால் இன்ஸ்பிரேசன் இருக்கும். ஆனால் அதை ஒத்துக்கொள்ள மாட்டார். முழுதும் தன் மூளை என்பதுபோல் பேட்டியளிப்பார். இப்படியாவது நாலு நல்ல முயற்சிகள் தமிழில் வருகிறதே என்னும் வகையில் கமலை பொறுத்தவரை எல்லாமே மன்னிக்கப்படலாம்.

--

2) கமலை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விமர்சிப்பவர்களிடம் அவரை விட்டுக்கொடுத்து பேச மாட்டேன். அதே சமயம் கமல் மீது எனக்கு விமர்சனமே இல்லை என்றும் சொல்ல மாட்டேன். 

A wednesday-ன் ரீமேக் தான் தமிழில் உ.போ.ஒருவன் என்பதற்கு ஒரு ஆராய்ச்சியும் தேவையில்லை. ஆனால் நான் தொடர்ந்து படித்த, பார்த்த கமல் பேட்டிகள் அனைத்திலும் அக்கதையை தன் சொந்த சரக்காக தம்பட்டம் அடித்து பேசிக் கொண்டிருந்தார். குறிப்பான கேள்விகள் வந்தபோது கூட அது வேற; இது வேற என்றே சொன்னார். என்னதான் கமல் ரசிகன் என்றாலும், இதெல்லாம் ஆதரிக்க இயலாத குணம். 

0 comments:

Post a Comment