சிற்சில குறிப்புகள் (5)

Posted: Sunday, August 29, 2010 | Posted by no-nononsense | Labels:
ஈழ நண்பர் ஒருவருடன் போர்முனையில் தற்கொலை என்பது பற்றி உரையாடிக் கொண்டிருந்தேன். பேச்சு புலிகளின் சயனைடு குப்பி மற்றும் சமுராய்களின் ஹாராக்கிரியை மையம் கொண்டு அமைந்தது. சயனைடை கடித்து நொடியில் இறப்பது என்பதை விட பாரம்பரிய ஹாராக்கிரியை செயல்படுத்த கடும்நுண்மனமுதிர்ச்சி வேண்டும் என்பது என் வாதமாக இருந்தது. காரணம் அது வயிற்றை கிழித்துக் கொண்டு குடல் சரிய விட்டு பல மணி நேர வலிக்குப் பிறகு சாவது.  அதோடு இந்த சயனைடு குப்பி சாவுக்கு முன்னோடிகளாக நாஜிக்கள் இருந்ததாக சில குறிப்புகள் படித்திருக்கிறேன். சட்டென்று தேடியெடுக்க முடியவில்லை. 


*


இரண்டு மணி நேரமாக ஒரு வாடிக்கையாளர் என்முன் அமர்ந்து இடைவெளியில்லாமல் பேசிக்கொண்டே இருக்கிறார். நான் ‘ஊம்’ மட்டும் கொட்டியபடி கேட்டுக் கொண்டிருக்கிறேன். எல்லாமே எனக்கு தேவையில்லாத தகவல்கள். பேசியதில் பிரச்னையில்லை.. என்ன இருந்தாலும் தொழில்முறையில் வேண்டப்பட்டவர்! ஆனால், சிலரால் எப்படி இப்படி முடிகிறது என்பது குறித்து கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது!


*


என் மேசையின் மீதிருக்கும் இங்க் பேனாவில் அதை வாங்கியபோது போட்ட மை இன்னும்கூட தீரவில்லை. தேவைப்படும் நேரங்களில் உதறியுதறி பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு nostalgia-க்காக! என் அழகிய கையெழுத்துதான் கர்ணகொடூரமாகி விட்டது :(


*


லெமூரியா கண்டம் பற்றி நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். என் வாசிப்பனுபவங்களின் அடிப்படையில் என் புரிதல்: அப்படி ஒரு கண்டம் இருக்கவேயில்லை. அது இரு ஆய்வாளர்களின் கற்பனையில் உதித்த ஒன்று. அதை தேவநேய பாவாணர் போன்ற ஆரியத்துக்கு எதிராக திராவிடத்தை முன்னிறுத்திய தமிழறிஞர்கள் குமரிக்கண்டத்துடன் முடிச்சிட்டு அதற்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்தி விட்டனர். 

0 comments:

Post a Comment