நீர்க்கோல வாழ்வை நச்சி

Posted: Friday, August 6, 2010 | Posted by no-nononsense | Labels:

இன்றைய தினம் கம்பனும் இனிதே துவங்குகிறது.

“நீர்க்கோல வாழ்வை நச்சி” என்ன ஓர் உவமை !!!

அது கம்பராமாயணத்தில் வரும் போர்க்களக் காட்சி. ராமனை எதிர்கொள்ள ராவணன் சார்பில் கும்பகர்ணன் போர்களம் புகுந்திருக்கிறான். அப்போது விபீஷணன் அவனை சந்திந்தித்து ‘நீயும் ராமனுடன் சேர்ந்து விடு’ என்று வேண்டுகிறான். அதற்கு கும்பகர்ணனின் பதில் தான் இந்த பாடல்:
நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள்வளர்த்துப் பின்னை
போர்க்கோலம் செய்துவிட்டார்க்கு உயிர் கொடாது அங்குப் போகேன்
தார்க்கோல மேனி மைந்த எனதுயிர் தருதியாயின்
கார்க்கோல மேனியானைக் கூடுதி கடுகின் ஏகி.
'தண்ணியில வரஞ்ச கோலம் மாதிரியான இந்த வாழ்வில், இத்தன நாள் வளத்து, இன்னிக்கு சண்டக்கிப் போடா'ன்னு அனுப்பி வச்சவனுக்குத்தான் என் உயிரைத் தரணும். அவன் செய்வது சரியில்லைஎன்று எனக்கு நல்லாவே தெரியும். ஆனா, அவனுடைய அடியவன் என்ற முறையில் இது என் கடமை. நீ செய்தது ரொம்ப சரி. அதுல எனக்கு வருத்தமே கிடையாது. நீயாவது பிழைத்திருக்க வேண்டும். என்னை வாழ வைக்கணும்னா, உடனே, இப்பவே போயிமறுபடியும் ராமன் பக்கத்துல நில்லு. தம்பீ, ஏன் சொல்றேன்னா, அண்ணன் நாளைக்குச் செத்துக் கிடப்பாம்பா. அவன் பக்கத்துல கிடக்கிறத்துக்கு ஒரு தம்பியின் பிணமாவது இருந்தாகணும்பா. 'தம்பியர் இன்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்மேல்'. நீயாவது பிழைச்சிருந்தாகணும்ப்பா.

பொருள் விளக்கத்திற்கு நன்றி: திரு.ஹரிகிருஷ்ணன், அகத்தியர் யாஹூ குழுமம்.

0 comments:

Post a Comment