முதல் சுதந்திர போராட்ட தியாகி?

Posted: Tuesday, August 3, 2010 | Posted by no-nononsense | Labels:


இடம்: கரூர் பஸ் ஸ்டாண்டு. 

அண்ணாரின் ஆக்சுவல் டேட் ஆஃப் டெத்: ஜூலை 31. மூன்று நாள் கழித்து இன்று ஆகஸ்ட் 03-க்கு கட் அவுட் உதிக்கக் காரணம் இறந்த நாள் ஆடி 18-ஆம். இந்த டிஸ்கவரியை செய்து விளம்பரம் செய்துகொள்ளும் கட்சியை விமர்சித்தால் இங்கேயுள்ள பலரே அடிக்க வரக்கூடும். இனமான கௌரவத மிக முக்கியமல்லவா..!

ஆனால் இந்த தீரன் சின்னமலை என்னும் தீர்த்தகிரி ஒரு நிஜமான போராளி என்பதில் மாற்று கருத்து இல்லை. (வீரபாண்டிய)கட்டபொம்மு போன்ற பாளையக்காரர்களுடன் சமகாலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து போர் புரிந்தவர். கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டவர். இவர்களை போன்றவர்களின் சரித்திரம் இன்று சுமக்க ஆரம்பித்திருக்கும் ஜாதி அடையாள அரசியல்தான் கொஞ்சம் உறுத்துகிறது. 


ஆனால், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட தியாகி?!

0 comments:

Post a Comment