நாடி ஜோதிடம்

Posted: Saturday, August 14, 2010 | Posted by no-nononsense | Labels:
ஜோசியத்திலேயே நாடி ஜோதிடம் தான் அதிகம் மக்களை நம்பச் செய்யக் கூடியது. அதற்கு காரணமும் வெளிப்படை - ஊர், உறவு, தொழில் எல்லாம் சரியா சொல்லிடுவாங்க. அதைக் கேட்டதும் மக்கள் அசந்து போயிடுவாங்க.

இங்கே நீ கவனிக்க வேண்டிய ஒன்று - உங்க பெயர் குமார், உங்களுக்கு இத்தனை அண்ணன், தம்பி, உங்க ஊர் நெட்டவேலம்பட்டி - அப்படின்னு பலரும் நினைக்கற மாதிரி துல்லியமா எல்லாம் சொல்லிட மாட்டாங்க. ஆனாலும் சரியாத்தான் சொல்வாங்க. எப்படிங்கறதுதான் இதில் உள்ள ட்ரிக். நிச்சயமா ட்ரிக் தான். அதில் சந்தேகமேயில்லை. எப்படிங்கறத கொஞ்சம் விரிவா எழுதணும். சுருக்கமாச் சொன்னா, ஓலையை ஒவ்வொன்றாக கழித்து கட்டுதலில் நம்மிடமிருந்தே விவரங்கள் பெறப்படும். அதை நாம் உணராவண்ணம் சூழலும், நாவன்மையும் இருக்கும். எல்லாவற்றிலும் ஒரு மேஜிக் வல்லுநனின் சாமார்த்தியம் இருக்கும். முடிவில் நாம் அவர்கள் விரும்பும் தகவலை அளித்து அவர்கள் இழுத்துச் செல்லும் மையப்புள்ளியை அடைந்து விடுவோம். 

0 comments:

Post a Comment