குற்றங்களும் தண்டனையும்

Posted: Tuesday, August 31, 2010 | Posted by no-nononsense | Labels: ,
தண்டனைகள் கடுமையாக கடுமையாகத்தான் குற்றங்களின் எண்ணிக்கை குறையும். மரண தண்டனை என்பது சட்டத்தில் இருக்கவேண்டிய தண்டனைதான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. அது இருப்பதினால் மட்டும் யாரும் கொலை செய்யாமல் இருக்கிறார்களா என்று எதிர்வாதம் வைப்பார்கள். அப்படி பார்த்தால் போலீஸ் ஸ்டேஷன் இருந்து மட்டும் என்ன குற்றம் நடக்காமலா இருக்கிறது, எதற்கு வெட்டியாக போலீஸ் ஸ்டேஷன் என்றோ, எதற்கு சிறைச்சாலை என்றோ கூட கேட்க முடியும். 

எத்தனை பேரை கொன்னாலும் தூக்கு கிடையாது. மிஞ்சி மிஞ்சி போனால் ஜெயில்லதான் போடப் போறாங்க என்றால், நீ கேஸ நடத்திக்கடா மகனே என்று வீட்டில் சொல்லிவிட்டு அறுவாளை தூக்குபவனின் எண்ணிக்கை அதிகமாகி விடும். அதே கொலை செய்தால் உயிர் போகும் என்றால் தன்னுயிர்க்கு அஞ்சுபவன் அதனை தவிர்ப்பான்.

நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். Only rare of rarest cases-ல் மட்டும்தான் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த rarest case-ல் உணர்ச்சிவயப்பட்டு செய்யப்படும் கொலைகளெல்லாம் கணக்கில் வருவதில்லை. 

இதே தலைப்பில் ஆறு வருடங்களுக்கு முன்பு வலைப்பதிவுலகில் எனக்கும் இன்றைய இணைய பிரபலம் ஒருவருக்கும் நீண்ட விவாதம் நடந்தது. ஒரு உயிரை கொல்வது மனிதமல்ல, அவர்களுக்கும் திருந்த வாய்ப்பளிக்க வேண்டும் என்னும் மாற்றுக் கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால் 4 வயது பெண் குழந்தையை வன்புணர்ச்சி செய்து, அதன் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி எரித்தவனுக்கும் சிறைதான், பசிக்கு பன் திருடி மாட்டினவனுக்கும் அதே சிறைதான் என்பது சமூக பாதுகாப்பு ஒழுங்குமுறைகளுக்கு ஏற்றதல்ல என்பது என் போன்றவர்களின் கருத்து.  

0 comments:

Post a Comment