சிற்சில குறிப்புகள் (4)

Posted: Sunday, August 15, 2010 | Posted by no-nononsense | Labels:
பேராசிரியர் ஞானசம்பந்தனை நடுவராக கொண்ட வழக்காடு மன்றம் ஒன்று பொதிகையில் நடந்து கொண்டிருக்கிறது. மனிதர் நகைச்சுவையை நாக்கில் தடவி, இல்லையில்லை, நாக்காகவே கொண்டிருக்கிறார். அதேசமயம் பேசுபொருளில் இருந்து விலகுவதும் இல்லை. அருமையான உரை!

*

மெகா டிவியில் எம்.எஸ்.வி.யின் இன்னிசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழின் மாபெரும் 'unsung hero' என்று இவரையேச் சொல்வேன். அந்த அதிருப்தியை கூட வெளிப்படுத்திக்கொள்ளத் தெரியாத அப்பாவி இவர். கண்ணதாசன் பெயரை உச்சரிக்காமல் ஒரு பாராவைக்கூட கடக்கமுடிவதில்லை எம்.எஸ்.வி.க்கு. எப்படி முடியும்?!

இந்த அத்யந்தம் பின்னால் வந்த இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் வாய்க்காமல் போனதில் நஷ்டம் அவர்களுக்கு என்பதை விட இசைக்குதான் என்பதே உண்மை. விலைமதிக்க முடியாத இழப்பு.

*

இந்த வார குமுதம் போல இவ்வளவு சொதப்பலான குமுதம் எடிசனை நான் வாசித்ததாக நினைவில்லை. பத்து நிமிட புரட்டலில் தூக்கி எறிந்து விட்டேன்.
குமுதத்தில் பங்காளி தகராறு ஏற்பட்ட பிறகு திறமையான பலர்
விலகி விட்டதாக கேள்விப்பட்டேன். அதை இதழில் உணரமுடிகிறது.

நான் பல ஆண்டுகளாக வாரா வாரம் குமுதம், ஆ.வி, துக்ளக் வாங்கி வருகிறேன். இடையில் ஒருமுறை துக்ளக் தவிர மற்ற இரண்டையும் நிறுத்தி விட்டேன். பிறகே உணர்ந்தேன் என் குடும்பத்தாரும் நண்பர்களும் அதை எவ்வளவு மிஸ் பண்ணுகிறார்கள் என்று. அவர்களுக்காக வாங்கி வருகிறேன். மாகசின்களை பொருத்தவரை நம் எதிர்பார்ப்பு வேறாக இருக்கிறது. அவர்களுக்கு வேறாக உள்ளது. ஆ.வியையும் குமுதத்தையும் தமிழ்நாட்டு குடும்பங்களில் இருந்து பிரிப்பது கடினம்.

0 comments:

Post a Comment