சிற்சில குறிப்புகள் (2)

Posted: Sunday, August 8, 2010 | Posted by no-nononsense | Labels:
  • ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்.ஆர்.ஐ வாழ்க்கைச் சூழல் அச்சமூட்டுகிறது. ஒரே தெருவில் ஒண்ணு மண்ணா பொழச்சி, ‘ஓ’ன்னு குரல் கொடுத்தா ஓடி வர ஊரே இருப்பதன் அருமை புரிகிறது.

  • Bannedthoughts.net -ல் தோழர் ஆசாத் படுகொலை குறித்த அறிக்கையை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மாவோயிஸ்டுகளுக்கு  என்று பிரத்யேகமாக ஒரு வலைதளம் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது. போராட்டங்களை டிஜிட்டல் வடிவிலும் முன்னெடுக்க வேண்டிய காலகட்டமிது.

  • முன்காலை முடிந்த
    ஞாயிறு இந்நாள்
    பின்காலை பொழுதில்
    கஷ்டம் பலபட்டு
    கண்விழித்தெழுந்து 
    காப்பிக்கோப்பையுடன்
    கபாலத்தில் ஏதேனும்
    ஏற்றிக்கொள்ளமே என
    கணினி முன்னமர்ந்தால்
    கர்மசிரத்தையாக
    கள்ளக்காதலுக்கு
    கருத்தரங்கம் நடாத்துகிறார்!
    கலாச்சாரக் காவலர்தம்
    அனாச்சார போக்குபற்றி
    காரசாரமாய் கருத்துரைக்க
    கைகள் பரபரக்கின்றன்.
    ஆனாலும்,
    கட்டினவள் அருகமர்ந்து
    கணினித்திரையில் 
    கண்பதித்திருப்பதை
    கருத்தில்கொண்டே 
    நழுவிச் சொல்கிறேன்
    “கப்சிப் கபர்தார்”!

    (கள்ளக்காதல் பற்றிய உரையாடலின் போது)

0 comments:

Post a Comment