நயா பைஸா செலவில்லா வாழ்க்கை

Posted: Saturday, August 21, 2010 | Posted by no-nononsense | Labels: ,
நான் கூட ஒரு பைசா செலவு செய்ததில்லை. அதுவும் பிறந்ததில் இருந்தே செலவு செய்ததில்லை. என்னா அதை நான் பார்த்ததும் இல்லை, அது புழக்கத்திலும்  இல்லை. 
ஹஹ்ஹஹ்ஹா.. :-)) 

இதுதான் 1 பைசா


இப்போதெல்லாம் 50 பைசாவே புழக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட மறைந்து விட்டது. 50 பைசாக்களில் முடிந்த பஸ் கட்டணங்களையும் கூட அண்மையில் 1 ரூபாய்க்கு round off செய்து விட்டார்கள். சில மிட்டாய்களும் முன்பு 10 பைசாவுக்கு விற்கப்பட்ட சுபாரி பாக்குகளும் மட்டுமே இன்னும் 50 பைசாவுக்கு கிடைக்கின்றன. அதற்கு கீழான பைசாக்களைப்பற்றி கேட்கவே வேண்டாம். அப்படி ஒரு விலையே இல்லை.

Jokes apart, whether living this kinda life is possible or not? தனக்கு தேவையான காய்கறிகளை விளைவித்துக்கொள்ள தனக்கென்று ஒரு நிலம் வேண்டாமா? அதுகூட இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அடுத்தவர் நிலத்தில் விளைவித்துக் கொள்ளலாம் என்றால் வாடகை கொடுக்க வேண்டியிருக்குமே. அதனால் பைசா செலவில்லாமல் வாழ்க்கை என்பது இயலாத காரியம். சும்மா ஒரு பிரச்சாரத்துக்காக கவனத்தை கவர செய்யலாம். 

ஆனால் மிகக் குறைவான தேவைகளை வைத்துக் கொண்டால், மிகக் குறைவான செலவில் வாழ்வது சாத்தியம்தான். அதுவும்கூட அந்த வாழ்வு ஆரோக்கியமான வாழ்வாக இருந்தால் மட்டுமே சாத்தியம். விஷத்தை உண்டு, விஷத்தை சுவாசித்து வாழும் சுற்றுச்சூழல் சீர்கேடான இந்த தலைமுறையில் நோய் நொடி என்பது எல்லா நிலை மனிதர்களிடமும் வெகு சாதாரணம். அதனால் உணவு மற்றும் ஆடம்பர தேவைகளை குறைத்துக் கொண்டாலும் கூட, மருத்துவ செலவு ஆளை கொன்று விடும். அதற்காகவாவது பணம் சேர்க்கத்தான் வேண்டும்.

இதுவும்கூட தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு மட்டுமே சரிவரும். குடும்பஸ்தர்களுக்கு குழந்தை வளர்ப்பு, கல்வி, அவர்களின் திருமணம் என்று அவனை சார்ந்திருக்கும் பல செலவுகள் உள்ளன. அவற்றிற்கும் சேர்த்து பொருள் ஈட்ட வேண்டியுள்ளது. 

ஆக இதையெல்லாம் காதால் கேட்டு கருத்தில் கொண்டு விவாதிக்க மட்டுமே சரிவரும். வாழ்க்கையில் பொருத்திக்கொள்ள முடியாது. இருந்தாலும் ஒரு விழிப்புணர்வு என்னும் அளவில் இவரின் உதாரண வாழ்வு பாராட்டத்தக்கது.

*

செலவு செய்யாத இம்மனிதரை போல பல வருடங்களாக தூங்கவே தூங்காத சிலரும் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் பாடல் எழுதிவரும் கவிஞர் முத்துலிங்கம் தான் தூங்குவதே இல்லை என்கிறார். தூக்கம் வருவதேயில்லை என்று தெம்பாக பேட்டியளிக்கிறார். அதேபோல் யோக கலையில் தேர்ச்சியான ஒரு சீனரைப் பற்றியும் சமீபத்தில் படித்தேன். அவரும் தூங்குவதே இல்லையாம். தன்னுடைய களைப்பை தியானத்தின் மூலம் போக்கிக் கொள்வதாக சொல்கிறார். மிக திடகாத்திரமான உடலைக் கொண்ட அவரின் வயது 70 என்பது கவனிக்கத்தகது. 

(இந்த இடத்தில் உள்ளத்தின் நான்கு உணர்வு நிலைகள் பற்றி நினைவுக்கு வருகிறது. ஜாக்ரத், ஸ்வப்னா, ஸஸுப்தி, துரியத், துரியாதீதம். அவற்றை பற்றி பின்னர் ஒருநாள் விரிவாக)

சிலர் சாப்பிடுவதேயில்லை. அல்லது மாற்று உணவு பழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். அதாவது தண்ணீர் மட்டுமே அருந்தி வாழ்வது போன்று. 

இன்னும், சுகவீனமே அடையாதவர்கள், உடலில் மின்னோட்டம் கொண்டவர்கள், நீரில் மிதப்பவர்கள் என்று விந்தையான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கைமுறைகளையும் பற்றி கேள்விப்படும்போது மனித படைப்பில் மறைந்துள்ள ரகசியங்கள் அதிசயிக்க வைக்கின்றன. 

0 comments:

Post a Comment