நாமக்கல் ஓசை

Posted: Thursday, January 14, 2010 | Posted by no-nononsense | Labels:

நேற்று நாமக்கல் ச.பே.புதூர் முனையில் ‘நாமக்கல் ஓசை’ எனும் விளம்பரத்தையும், இது சம்மந்தமான சில போஸ்டர்களையும் கண்டேன். பொங்கலை முன்னிட்டு சென்னையில் 17 இடங்களில் வெகு ஜோராக நடந்துவரும் 'சென்னை சங்கமம்" கலை நிகழ்ச்சிகளைப் போல இங்கேயும் "நாமக்கல் ஓசை" என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்கிறார்கள் என்று தெரிகிறது. நிச்சயம் வரவேற்கத்தக்க முடிவு. இதேமாதிரி மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டால் அது மெல்ல மறைந்துவரும் தமிழ் மரபுசார் கலை வடிவங்களை மீட்டெடுப்பதாக இருக்கும்.

மதிய நாய் கண்காட்சி மற்றும் மாலை நேர கலை நிகழ்ச்சிகளுக்கு செல்லலாம் என்று இருக்கிறேன். உள்ளூர் நண்பர்களை அங்கே சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சி. செவிக்கின்பம் போக கூடுதலாக என் செலவில் லிச்சி ஜூஸும் கிடைக்கும்.

0 comments:

Post a Comment