’தமிழ்ப் படம்’ - விமர்சனம் & தியேட்டரில் IPL போட்டிகள்

Posted: Saturday, January 30, 2010 | Posted by no-nononsense | Labels: ,
’தமிழ்ப் படம்’ பார்த்துவிட்டேன். பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை. எதற்கு சிரிக்கிறோம் என்று தெரியாமலே படம் நெடுக சிரித்துக்கொண்டிருந்தோம். என்னதான் படம் கிச்சு கிச்சு மூட்டினாலும் கதை என்று ஒன்றும் இல்லாததால் இரண்டாம் பாதியில் திகட்டி நெளிய வைக்கிறது. ஒரு பத்து லொள்ளு சபா எபிஸோடுகளை ஒருசேர பார்த்த உணர்வு. அவ்வளவுதான்.

*

வரும் IPL போட்டிகளை தியேட்டரில் நேரடி ஒளிபரப்பு செய்யப் போவதாக இடைவேளையில் விளம்பரம் காட்டினார்கள். நல்ல ஐடியாவாக தோன்றுகிறது. வீட்டில் சின்னத் திரையில் தனிமையில் பார்ப்பதைவிட தியேட்டரில் பெரிய திரையில் ஒரு பெரிய கூட்டத்துடன் பார்ப்பது கொண்டாட்டமான அனுபவமாக இருக்கும். எனினும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப ஆட்டத்தின் போக்கு அமையும்வரை எல்லாம் சுபம்தான். இல்லையென்றால்தான் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்; அதை பணம் கொடுத்து பார்க்கும் தியேட்டரினுள் எப்படி வெளிப்படுத்துவார்கள் என்று தெரியவில்லை.

(எனக்கெல்லாம் என்னுடைய கலைஞர் டிவியே போதும் Free Laughing Smileys)

0 comments:

Post a Comment