சோழர்கள், இலங்கை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் - சில எண்ணங்கள்

Posted: Sunday, January 24, 2010 | Posted by no-nononsense | Labels: ,
இலங்கையின் பூர்வகுடி திராவிடர்களாக (தமிழர்கள்) இருக்கவே வாய்ப்பு அதிகம் என்பது அங்கே கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த அகழ்வாய்வுகளின் மூலம் அறிய முடிகிறது. அதில் கிடைத்த பழங்கால ஆயுதங்கள், நாணயங்கள் தென்னிந்தியாவின் திராவிட நாகரிகத்துடன்தான் ஒத்துப் போகிறதே தவிர, தங்களை ஆரியர்களாக அடையாளப்படுத்தி வரலாற்றை திரித்து வைத்திருக்கும் சிங்களவர்களின் புரட்டுடன் பொருந்திப் போகவில்லை. அங்கே கிடைத்த முதுமக்கள் தாழியில் இங்கே போலவே தமிழ் எழுத்துக்கள் காணப்படுப்படுவதே இதற்கு அத்தாட்சி.

சிங்களவர்களின் வரலாற்று நூலாக கருதப்படும் மகாவம்சத்தில் கூட சிங்களவர்களின் முதல் அரசன் விஜயன் இலங்கையில் குடியேறும்போது அங்கே பூர்வகுடி பெண் ஒருத்தியை எதிர்கொண்டு அவளையே மணம்புரிந்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் சிங்களர்களின் குடியேற்றத்துக்கு முன்பே அங்கே ஒரு இனம் நிலைபெற்று வாழ்ந்து வந்துள்ளது அவர்கள் புனைந்து வைத்த புராணத்தின் மூலமாகவே அறிய முடிகிறது.

இதன்மேல் இன்னும் நிறைய எழுத முடியும். முன்பு பல விவரங்கள் சேகரித்து வைத்திருந்தேன். இப்போது நிறைய மறந்துவிட்டது. என்றாலும், ஒன்று மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஈழத்தின் தமிழ் இனம் என்பது அதன் பூர்வகுடி தானே தவிர, சிங்களவன் சொல்வது போல பிழைப்புக்காக வந்தேறியது அல்ல. அதற்கு அங்கே நடப்பது முற்றிலும் அநியாயம். படு பாதகம். அதன் நீண்ட கால தீர்வு தனி ஈழமாகத்தான் இருக்க முடியும். அவசியம் ஏற்பட்டால் இன்னும் விரிவாக அலசலாம்.

*

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதையை இதனுடன் என்னால் சம்மந்தப்படுத்த முடியவில்லை. ஆனால் சோழர்களுக்கும் இலங்கைக்கும் ஒரு சம்மந்தம் உண்டு. அதன் சில சம்பவங்கள் இந்த படத்தின் சில காட்சிகளுடன் - சில முரண்பாடுகள் இருப்பினும் - ஒத்துப்போவது கொஞ்சம் சுவாரசியம்தான்.

மன்னர்களின் பெயர்கள் மறந்துவிட்டன. இருந்தாலும் சொல்ல துணிகிறேன்.

சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே மூண்ட ஒரு போரில் தோற்றுப் போகும் பாண்டிய மன்னன், தன்னுடைய குலப் பெருமை மிக்க அரச முடி, அரசியின் முடி மற்றும் இந்திரஹாரம் ஆகியவை சோழர்களின் கையில் கிடைக்காமல் இருக்க தன்னுடன் நட்பில் இருந்த இலங்கை மன்னன் மகிந்த வசம் ஒப்படைக்கிறான். அதனை கைப்பற்றுவது சோழர்களின் கௌரவ பிரச்னையாக இருக்கிறது. அதற்காகவே தொடர்ந்து சோழர்கள் இலங்கை மீது படையெடுக்கிறார்கள். அந்த நோக்கம் பின்னால் இராஜேந்திர சோழன்(இராஜராஜன் மகன்) காலத்தில்தான் நிறைவேறுகிறது. இலங்கை முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவரும் இராஜேந்திரன், அநுராதபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆண்டதாக வரலாறு.

உண்மையான வரலாற்றின் படி பாண்டியனின் குலப்பெருமைகள் சிங்களவர்களிடம் சிக்கிக்கொள்ள, அதனை கைப்பற்ற சோழர்கள் தான் இலங்கை மீது படையெடுக்கிறார்கள். ஆனால் சினிமாவில் சோழர்கள் மீது படையெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த முரண்நகை தவிர வேறு சம்மந்தம் இருக்க வாய்ப்பில்லை.

0 comments:

Post a Comment