எதிர்மறை பதிவர்களை எதிர்கொள்வது எப்படி?

Posted: Tuesday, January 19, 2010 | Posted by no-nononsense | Labels:
My reply on the topic of taking up the bloggers who are characterized by habitual skepticism:

நண்பர்களே.. இங்கே பிரச்னை பகலவன் பகிர்ந்து கொள்ளும் செய்திகள் என்பதை விட அதை அவர் வழங்கும்விதம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். அவர் சின்னதாக ஓரிரு வரிகளில் சொல்லிச் செல்லக்கூடியதைக்கூட இரண்டு மூன்று பாராக்களுக்கு இழுக்கிறார். அதற்காக அதை ஊதி பெரிதாக்க வேண்டியிருக்கிறது. இந்த அவரின் எழுத்து நடைதான் அச்செய்தியை உள்வாங்கிக்கொள்வதில் இடைஞ்சலாக இருக்கிறது.

உதாரணமாக காவிரி ஆற்றின் மழை நீர் வீணாக கடலில் கலப்பது பற்றி பல அணைகளின் படங்களுடன் ஒரு பதிவு போட்டிருந்தார். உண்மையைச் சொன்னால் அது ஒரு உப்பு பெறாத பதிவு. உள்ளே தெரிந்து கொள்ள ஒரு தகவலும் உருப்படியாக கிடையாது. ஆனால் பார்க்க பெரிய ஆய்வு போன்று தோற்றம் அளிக்கும். இந்த பதிவு போதைதான் இணையவெளியின் முக்காலே மூணு வீசம் பதிவர்களை ஆட்டி வைக்கிறது. காலையில் எழுந்ததும் அன்றைய செய்திதாளை விரித்து வைத்துக்கொள்கிறார்கள். சமூகத்தையும் அரசாங்கத்தையும் குறைகூறி பதிவு எழுதி தங்கள் மேதமையை நிரூபித்துக்கொள்ளத்தக்க செய்திகளை குறித்துக்கொள்கிறார்கள். நீட்டி முழக்கி போடுக ஒரு பதிவு என்று பொட்டியைத் தட்டித் தள்ளுகிறார்கள்.

எல்லோரும் எழுத்தாளர் அவதாரமெடுக்கும் பேரண்டச்சுதந்திரவெளி இது. இங்கே நாம்தான் நீரை விலக்கி பாலை உண்ண பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அது பகலவனின் பதிவுகளுக்கு மட்டும் அல்ல. இங்கே பகிர்ந்துகொள்ளப்படும் தெரிவிக்கப்படும் அனைத்து கருத்துக்களுக்கும் பொருந்தும்.

0 comments:

Post a Comment